ராமநாதபுரம் சுதந்திர தின கொண்டாட்டம்
Ramanathapuram King 24x7 |15 Aug 2024 6:02 AM GMT
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் 78வது சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 15.08.24 மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் 78 வது சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் சாரண சாரணியர், ஊர்க்காவல் படை , தேசிய மாணவர் படை உள்ளிட்டவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார், வெண்புறாக்களை வானில் பறக்க விட்டு மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டு மகிழ்ச்சியடைய செய்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியபின்பு சிறப்பாகப் பணிபுரிந்த அரசு அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியதையடுத்து 1கோடியே 67 ஆயிரத்து 499 ரூபாய் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story