தந்தை மீதான பாசத்தால் விஷமருந்தி மகன் தற்கொலை

தந்தை மீதான பாசத்தால் விஷமருந்தி மகன் தற்கொலை
குமாரபாளையம் அருகே தந்தை மீதான பாசத்தால் விஷமருந்தி மகன் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் கதிர்வேலு, 24. தனியார் நிறுவன கூலித் தொழிலாளி. இவரது தந்தை கிருஷ்ணன், உடல்நலமில்லாமல், ஒரு கை, கால் வராமல் படுத்த நிலையில் இருந்து வந்தார். இவரது இந்நிலை கண்ட கதிர்வேலு, தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட நிலையில் கடந்த சில நாட்களாக கவலையுடன் இருந்து வந்துள்ளார். ஆக. 9, காலை 10:00 மணியளவில் தனது வீட்டின் உள்ளே இருந்து வாயில் நுரை தள்ளியபடி வெளியில் வந்த போது, இவரது தயார் விஜயா, அதிர்ச்சியடைந்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பூச்சி மருந்து குடித்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 08:00 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story