தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது

தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது
தனியார் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
ஈரோடு பள்ளிபாளையம் சாலையில் அமைந்துள்ள ,நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் சி.என்.ராஜா பங்கேற்று ,சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் வீரதீர செயல்கள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார் . இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் டி.கணிக்காச்சலம் கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வேடம அணிந்து வந்து, தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பள்ளி ஆசிரியை பத்மா அவர்கள் நன்றியுரை கூற சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.
Next Story