குத்துச்சண்டை வீராங்கனைக்கு கலெக்டர் வாழ்த்து!
Pudukkottai King 24x7 |15 Aug 2024 1:14 PM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த பாராட்டு விழா நிகழ்வில் புதுக்கோட்டை குத்துச்சண்டை வீராங்கனை மாணவி ஜீவாவுக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆட்சியர் அருணா பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பயிற்சியாளர் காதர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story