குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க கோரி மனு வழங்கிய பெற்றோர்

குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க கோரி மனு வழங்கிய பெற்றோர்
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை ஊராட்சி சார்பில், கிராம சபை கூட்டமானது, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினார். அதில் வெப்படை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ,எங்கள் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளின் கற்றல் திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
Next Story