சங்ககிரி தேவண்ணக்கவுண்டனூர் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா....

சங்ககிரி :தேவண்ணக்கவுண்டனூர் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா....
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திரதினவிழா பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. கணித பட்டதாரி ஆசிரியர் முருகன் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவி சாரதா பழனியப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார் மேலும் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் தீரன் சின்னமலை கலாச்சார மன்றம் சார்பில் தேசிய கொடியினை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர். பள்ளியின் முன்னாள் மாணவர் குணசேகரன் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவ மாணவிகளுக்கு பென்சில்கள், ரப்பர், பேனாக்கள் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கினார். இதில் பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் பழனியப்பன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சத்யா, வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சித்ரா, சீனிவாசன் ,ஜெயந்தி,தீபா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Next Story