சங்ககிரி பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா...

சங்ககிரி: பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா...
நாட்டின் 78 வது சுதந்திர தின விழா சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் பொன் தனராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு அர்ஜுனன் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தமகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கோனேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.திண்டுக்கல் சின்னாளப்பட்டி பசுமைவாசல் பவுண்டேசன் வழங்கிய வீரபாண்டியகட்டபொம்மன் சுடர்விருது இப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார், கணித பட்டதாரி ஆசிரியை திருமதி முத்துலட்சுமி இடைநிலை ஆசிரியர்கள் சௌ.ராஜேஸ்வரி க.ரா.யுவ சக்தி ஆகியோர்களுக்கு தமிழமுது அறக்கட்டளை வழங்கிய திறன் வளர் நல்லாசிரியர் விருதுகளை ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அர்ச்சுனன் பொருளாளர் மகுடேஸ்வரன் ஆகியோர் வழங்கினர் . மேலும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊராட்சிசெயலர் விஜயராஜ், மக்கள்நலபணியாளர் செல்வமணி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.அப்போது பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story