சங்ககிரி சக்தி மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு...
Sangagiri King 24x7 |16 Aug 2024 4:15 AM GMT
சங்ககிரி: ஆடி வெள்ளிக்கிழமை சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் பக்தர்கள் தரிசனம்...
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அருள்மிகு சக்தி மாரியம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர்,குங்குமம்,திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவியப பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சக்தி மாரியம்மன் வழிபட்டு சென்றனர்
Next Story