திருச்செங்கோடு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு

X
திருச்செங்கோடு ஒன்றியத்தைச் சேர்ந்த 26 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஆறாவது முகாமாக திருச்செங்கோடு கைலாசம் பாளையம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்சுமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டு இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன் பெற்றவர்கள், மின்வாரியத்தில் இணைப்புகள் பெற்றவர்கள் என பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல், சுஜாதா தங்கவேல்,ஒன்றிய அட்மாகுழு தலைவர் தங்கவேல், திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த் தி.கைலாசம்பாளையம் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி முருகன் தி.புதுப்பாளையம்ர ஊராட்சி தலைவர் ராஜா வட்டூர் ஊராட்சித் தலைவர் பிரபாகரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

