குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை!

பக்தி
குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தீபாராதனை செய்தனர். பின்னர் பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, கண்ணாடி வளையல், விளக்குத்திரி, தையல் இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குடும்ப நலன், மாங்கல்ய பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
Next Story