சத்தியமங்கலம் அருகே கணேசன் என்பவரது தோட்டத்து வீட்டில் நான்கு பெண்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்

சத்தியமங்கலம் அருகே கணேசன் என்பவரது தோட்டத்து வீட்டில் நான்கு பெண்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்
சத்தியமங்கலம் அருகே கணேசன் என்பவருது தோட்டத்து வீட்டில் நான்கு பெண்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி இவர் நேற்று வெளியே இருந்த போது கைக்குழந்தையுடன் பெண் உட்பட நான்கு பெண்கள், இவரது தோட்ட வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். யாசகம் கேட்பது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்த காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆகி இருந்தது. இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் நான்கு பெண்களில் ஒருவர் ஆளில்லாத வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடுவது வீடியோவில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story