நடு சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு

பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் எரிந்ததால் பரபரப்பு
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் .இவர் ஈரோட்டில் தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அன்று இரவு  திருச்செங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு தன்னுடைய 2013 ஆண்டு  மாடல் சொகுசு மாருதி  காரில் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கார் திடீரென நடு சாலையில் நின்றுள்ளது .இதனை அடுத்து காரில் இருந்து இறங்கி கார் முன்பக்க பேனட்டை திறந்து பார்த்த பொழுது, லேசாக புகை வந்து திடீரென முன்பக்க பகுதி தீப்பிடித்து எரிய துவங்கியது.இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் வேக வேகமாக காரின் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர் .இதன் காரணமாக தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . தீ விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியாத நிலையில் இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கோவை குமாரபாளையம் பைபாஸ் சாலையில் இதேபோல ஒரு கார் நடுசாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story