வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து  நகை, பணம் திருட்டு
குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சிவசக்தி நகரில் வசிப்பவர் ராஜா, 34. தேங்காய் வியாபாரம். இவரும், இவரது மனைவியும், ஆக. 3ல் காலை 09:30 மணியளவில் சேலம் சென்றனர். இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டிவிட்டு காலை 10:00 மணியளவில் பள்ளிபாளையம் சென்று விட்டு மாலை 03:30 மணியளவில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும, உள்ளே பீரோ போட்டு உடைக்கப்பட்டும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் தங்க மோதிரங்கள், டாலருடன் கூடிய செயின், வளையல், கம்மல், ஆகிய ஐந்தரை பவுன் தங்க நகைகளும், பணம் 80 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தீவிர விசரனைஸ் செய்து வருகின்றனர்.
Next Story