பள்ளப்பட்டி ஊராட்சியில் குழாய் சரி செய்யும் பணி
Dindigul King 24x7 |17 Aug 2024 3:01 PM GMT
பள்ளப்பட்டி ஊராட்சியில் குழாய் சரி செய்யும் பணி
பள்ளபட்டி ஊராட்சியில் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் குழாய் பணி அமைப்பதற்காக நெடுஞ்சாலை உடைத்து விட்டு அப்படியே விட்டு விட்டதால் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தை சந்தித்து வந்தனர். திண்டுக்கல் கம்பம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையை நேரடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் நெடுஞ்சாலை துறையினர் தற்போது பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் சாலையை சரி செய்யும் பணி நடைபெற்றது.
Next Story