இலக்குப் பந்து போட்டியில் குமரி வீராங்கனைகள் சாதனை –
Nagercoil King 24x7 |18 Aug 2024 6:50 AM GMT
கலெக்டர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலக்குப் பந்து விளையாட்டு போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா -வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- கன்னியாகுமரி மாவட்ட இலக்குப் பந்து ஜூனியர் பெண்கள் அணி கடந்த 11.08.2024 அன்று சென்னையில் சவிதா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில இலக்குப் பந்து போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறுவதோடு, நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அலுவலர் ராஜேஷ், கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா. ஜி. ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட இலக்குப் பந்து கழகத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, டாக்டர் ப. மகேஷ் (செயலாளர்), வெங்கடேஷ்(துணை பயிற்சியாளர்), தினேஷ் செல்லையா (துணை மேலாளர்), பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story