ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கிள்ளியூர் எம் எல் ஏ
Nagercoil King 24x7 |18 Aug 2024 7:01 AM GMT
வயநாடு நிவாரணமாக வழங்கினார்
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர்சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தனது ஒரு மாத சம்பளமான ரூ. 1.05 லட்சத்தை வயநாடு நிவாரண நிதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. விடம் வழங்கினார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story