ராசிபுரத்தில் கனமழை.. சாக்கடை நீர் சாலையில் அதிக அளவில் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு..
Rasipuram King 24x7 |18 Aug 2024 12:15 PM GMT
ராசிபுரத்தில் கனமழை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில தினங்கள் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் லேசான சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு சாரல் மழையாக தொடங்கி அரை மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ராசிபுரம் ஒரு வழிச்சாலை(புதுப்பாளையம் ) செல்லும் பகுதியில் இந்த மழையால் அதிக அளவில் சாக்கடை நீரும் வெளியேறி போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. இந்தப் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரி முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் இல்லையெனில் தொடர்ந்து இது போன்ற கழிவு நீர் சாக்கடை அதிக அளவில் சாலையில் செல்லும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story