அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோல்கட்டாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சத்தியபிரியதர்ஷனி, ஜீவா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கோல்கட்டாவில் முதுநிலை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். டாக்டர்கள் ஜெயஸ்ரீ, தங்கராஜ், ஜெயசீலன், ஜெனிபர், ராகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story