பாரதிய ஜனதா கட்சி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்
பா.ஜ., சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி., அணி மாநிலச் செயலாளர் செல்வநாயகம், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், துணைத் தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினர் மாநில துணைத் தலைவர் துரைசாமி சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், செயலாளர் ஹரி, பார்வையாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் சர்தார் சிங், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், வர்த்தக பிரிவு செயலாளர் கண்ணன், பொருளாளர் குமரவேல், செயலாளர்கள் பிரகாஷ், கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் சக்திவேல், நகர தலைவர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் பிரேம்ராஜ் நன்றி கூறினார்.
Next Story