கஞ்சா வைத்திருந்த பட்டதாரி வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த பட்டதாரி வாலிபர் கைது
கைது
உளுந்துார்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவாசு, 22; என்பதும், எம்.இ.. முதலாம் ஆண்டு படித்து வருவதும், தெரிந்தது. மேலும், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story