வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கிள்ளியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Nagercoil King 24x7 |19 Aug 2024 5:34 AM GMT
கருங்கல் அருகே
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தட்டான்விளை அரசு நடுநிலைப்பள்ளியில் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஸ்டாலின் ஜோஸ், வட்டார கல்வி அலுவலர் கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் சாரதி, வினோ எட்வின் ஜார்ஜ், அருண் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கருங்கல் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story