நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
Nagercoil King 24x7 |19 Aug 2024 5:37 AM GMT
போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன் துறை பகுதி செயின்ட் ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி. மீன்பிடி தொழிலாளியான இவரது மகள் அஜீனா ஆண்டனி (20). அஜீனா கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் விடுப்பு எடுத்து விட்டு, கடந்த 17ஆம் தேதி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இவரது தாயார் ஆலயத்திற்கு சென்று விட்டு வரும்போது, அஜீனா வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, நித்திரவிளை யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அஜீனா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story