மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை வாலிபர் கைது
Nagercoil King 24x7 |19 Aug 2024 6:22 AM GMT
பூதப்பாண்டியில்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த கண்டளவு பகுதியை சேர்ந்தவர் ஏபி ஜான்சன் (45) இவர் பூதப்பாண்டி மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன் மனைவி ஜெயா என்பவரை எபி ஜாண்சன் கிண்டல் செய்தது தொடர்பாக, ஜெயாவின் 22 வயது மகன் ஜெனித் என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் எபி ஜாண்சன் ஜெயாவை கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இது தெரிய வந்தவுடன் ஜெனித் நேற்று மாலையில் மாலை 7 மணி அளவில் திட்டு விளை தர்கா அருகே வரும்போது, அங்கு நின்ற எபி ஜான்சனிடம் வாக்குவாதம் செய்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெனித் தான் மறைத்து வைத்திருந்த தேங்காய் வெட்டும் அறிவாளால் எபி ஜான்சன் தலையில் வெட்டியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, எபிஜான்சன் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெனித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story