கறம்பக்குடி அருகே மணல் கடத்தியவர் கைது!

கறம்பக்குடி அருகே மணல் கடத்தியவர் கைது!
குற்றச்செய்திகள்
கறம்பக்குடி அருகே ஆன்ட்டி கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (37). இவர் திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒரு யூனிட் மணலை அனுமதியின்றி மினி லாரியில் அள்ளி கொண்டு வந்த ரவீந்திரனை போலீசார் கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்
Next Story