செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தந்தை நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தந்தை நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களின் தந்தை நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு. செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் கிராமத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் த. பொன்னிவளவன் அவர்களின் தந்தை சி.தம்பிரான் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் த.பொன்னிவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அவரது உருவ படத்தினை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எழில் கரோலின், விசிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தமிழினி, கனல்விழி, முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.க. ஆதவன், மாவட்டத் துணைச் செயலாளர் வெள்ளபுத்தூர் விஜயகுமார் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story