அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

X
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பௌணர்மியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆவணி மாத பௌணர்மியையொட்டி பெரியநாயகி அம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபாடு செய்தனர்.
Next Story

