சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை....

சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை....
சங்ககிரி :வி என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி, வெங்கட்ட நாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்து 2ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு 108 கலசங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெங்கட்டநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து 2ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு 108 கலசங்களுடன் வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டு சென்றனர். கோயில் நிர்வாக குழுவின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story