மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
விழா
கெங்கவல்லி: வீரகனூர் பேரூராட்சி ராயர்பா ளையத்தில், கற்பகவிநாயகர் கோயிலில் கிருஷ்ணன், மாரியம்மன் சன்னதி அமைந்துள்ளன. இக்கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்து கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து தரிசனம் செய்தனர். விழா குழு சார்பில் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story