கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை போட்டி

கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை போட்டி
போட்டி
வேலுார் கல்வி மண்டல அளவில் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு இடையே 'என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்னும் தலைப்பில் பாரதியார் கவிதைப் போட்டி நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். இப்போட்டியில் கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி, இந்திலி ஆர்.கே.எஸ் கல்லுாரி, பங்காரம் லட்சுமி கல்லுாரி, தச்சூர் பாரதி மகளிர் கல்லாரி, விரியூர் இமாகுலேட் கல்லுாரி, ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி மாணவர்கள் என மொத்தம் 70 பேர் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன், வேதியியல் துறை தலைவர் தருமராஜன், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் நாகராஜன், வீரப்பன் செய்திருந்தனர். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story