நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு
அனுசரிப்பு
கள்ளக்குறிச்சி ஓம் முருகா குரூப் நிறுவனர் தேவநாதனின் இரண்டாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி சாமியார் மடம் பகுதியில் உள்ள ஓம்முருகா டிராக்டர்ஸ் நிறுவனத்தில், மறைந்த தேவநாதனின் படத்தை, அவரது தந்தை ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் வீரமணி - தாய் புனிதா, மகள் சீதாலட்சுமி ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.ஓம் முருகா தேவா நினைவு அறக்கட்டளை நேற்று தொடங்கப்பட்டது. காலை 11:00 மணியளவில் சாமியார்மடம், மந்தைவெளி, கள்ளக்குறிச்சி பஸ்நிலையம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story