பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர்

பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர்
மக்கள் நீதி மய்யம் கோரிக்கை பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி, 65. மாற்றுத்திறனாளி. இவர் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, சித்ரா ஆகியோரிடம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு கோரிக்கை வைத்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் இது குறித்து கோரிக்கை விடுத்தனர். உடனே இந்த கோரிக்கைp ஏற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். இதில் சித்ரா, மல்லிகா, வசந்தி, மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story