மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
காடச்சநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் குவிந்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை காடச்சநல்லூர் அடுத்துள்ள ,ஐந்து பனை என்ற பகுதியில் காடச்சநல்லூர் ஊராட்சி, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி சார்பில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது . இதில் மின்சார வாரியம் ,சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை என 15 க்கும் மேற்பட்ட அரசு அரசுத் துறைகளின் சார்பில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது .ஆதார் சேவைகள், பட்டா மாறுதல், வங்கி கணக்கு துவங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story