அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்...

சங்ககிரி:அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு...
சேலம் மாவட்டம் சங்ககிரிகயை அடுத்துள்ள அரசிராமணி செட்டிப்பட்டி நாடார் தெரு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிபட்டி நாடார் தெரு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு வாரங்களுக்கு பூசாட்டுதலுடன் கம்பம் நடுவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மாரியம்மன் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி பக்தர்கள் தீர்த்துக்குடம் எடுத்துக்கொண்டு மேல காலங்கள் முழங்க கிராமப் பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
Next Story