கனரா வங்கி சார்பில் மாணவிகளுக்கு ரொக்க பரிசு

கனரா வங்கி சார்பில் மாணவிகளுக்கு ரொக்க பரிசு
பரிசு வழங்கள்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வாழக்கோம்பை ஊராட்சியில் கடந்த ஆண்டு 5, 6, 7, 8-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஓவியாஸ்ரீ, மகிஷா, சமீரா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 9-ம் வகுப்பு மாணவியான விபிகாசினிக்கு ரூ. 5 ஆயிரம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. வாழைக்கோம்பை ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பரிசு தொகையை தம்மம்பட்டி கனரா வங்கி மேலாளர் மோகன் வழங்கினார். சங்கீதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேவி, திருமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதா வரவேற்றார். மாணவிகளின் வங்கி கணக்கில் ரொக்கப் பரிசு செலுத்தப்பட்டது.
Next Story