சேவைக் குறைபாடு: இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

X
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சார்ந்த பென்னி மேத்யு என்பவரது நான்கு சக்கர வாகனம் சாத்தான் குளம் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இது அங்குள்ள காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த வாகனத்தை திருநெல்வேலியிலுள்ள ஒரு கார் பழுது பார்க்கும் நிறுவனத்திடம் சரி செய்ய ஒப்படைத்துள்ளனர். இதற்கான செலவுத் தொகையை தருமாறு பொதுத் துறை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் உரிய ஆவணங்களுடன் புகார்தாரர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பென்னி மேத்யு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட விலையான 11 இலட்சம் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story

