கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
தருமாபுரி கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தருமாபுரி கிராமத்தில், கெங்கை அம்மன் கோவில், ஆஞ்நேயர் கோவில், நவகிரக சன்னதிகள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்தன. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இதற்காக, கடந்த 17ம் தேதி காலை 8:00 மணிக்கு, முதல்கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நான்காம் கால பூஜையும், 9:30 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக நீரும் ஊற்றப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story