மேல்மருவத்தூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதி விபத்து
Maduranthakam King 24x7 |21 Aug 2024 7:44 AM GMT
மேல்மருவத்தூரில் அதிவேகமாக வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதி விபத்து
விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் முன்னாள் சென்ற ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதி தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.. இதனையடுத்து சம்பவம் அறிந்து அங்கு வந்த மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story