சுதந்திரப் போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்தநாள் நாள் விழா

சுதந்திரப் போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்தநாள் நாள் விழா
குமாரபாளையம் கிளை நூலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி ஜீவானந்தம் பிறந்தநாள் நாள் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதி கிளை நூலகத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தம் அவர்கள் பிறந்த நாள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொழில் சார் பயிற்சி 15 நாட்கள் நடைபெற்ற பயிற்சிக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை விடியல் பிரகாஷ் கிளை நூலக வாசக வட்ட தலைவர். முன்னிலை பஞ்சாலை சண்முகம் அவர்கள். சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தம் அவர்களைப் பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரேணுகா முதல்வர் அவர்கள் சிறப்பாக மாணவர்களிடையே பேசினார்கள். 15 நாட்கள் தொழில் சார் பயிற்சி பெற்ற 52 மாணவ மாணவிகளுக்கு கிளை நூலகர் மாரியாயி அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முனைவர் ஞானதீபன் தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் புத்தகங்கள் வழங்கினார்கள். விழா முடிவில் உதவி நூலகர் தீபா அவர்கள் நன்றி உரையாற்றினார். விழாவில் ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், மற்றும் உளவியலாளர் சண்முகசுந்தரம், மற்றும் ஜம்புநாதன், தீனா, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Next Story