மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
Maduranthakam King 24x7 |21 Aug 2024 2:02 PM GMT
மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தில் 10 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வண்டலூா் அருகேயுள்ள ஊனமாஞ்சேரி போலீஸ் அகாதெமியில் பணியாற்றி வந்த ஆா்.மேகலா மதுராந்தகம் டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அதன்படி, நேற்று முன்தினம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டாா். இதுவரை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சிவசக்தி மதுரை அண்ணா நகா் டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா். புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற மேகலாவுக்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்புநிலை உதவி ஆய்வாளா்கள்,காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
Next Story