கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பு வழிபாடு

கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு கும்பாபிஷேக விழா கடந்த 2023, ஆக. 19ல் நடந்தது. நேற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா ஆகியன நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.
Next Story