நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார். பவானி காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் திலிப்குமார், 34. மெக்கானிக் கூலி. இவர் நேற்றுமுன்தினம் பகல் 12:00 மணியளவில் தனது முதலாளியை பார்த்து விட்டு வருவதாக மனைவி பரஞ்சோதி, 32, வசம் கூறி தனது ஹீரோ ஹோண்ட ஸ்பெலெண்டர் வாகனத்தில் சென்றார். மாலை 02:15 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில், பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதி படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 03:50 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story