நத்தத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
Dindigul King 24x7 |21 Aug 2024 4:29 PM GMT
நத்தத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபால சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள மஹா வாராஹி அம்மனுக்கு ஆவணி மாத பௌர்ணமியையொட்டி உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மஹா வாராஹி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தேன். பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனைகளும்,சிறப்பு யாகமும் நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை பௌர்ணமி விளக்கு பூஜை கமிட்டியினர் செய்திருந்தனர். இதேபோல் நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கும் விளக்கு பூஜை நடைபெற்றது.
Next Story