விக்ரம் பாராட்டும் விதமாக ஒவியம் வரைந்த ஆசிரியர்

விக்ரம்  பாராட்டும் விதமாக ஒவியம் வரைந்த ஆசிரியர்
ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் தங்கலான் திரைபடத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டும் விதமாக.. சினிமாவிற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன், ஈடுபட்டுடன் நடிக்கும் விக்ரம் பாராட்டும் விதமாக அடுத்த கமல் விக்ரம் தான் என்பதை குறிக்கும் விதமாக "கமலஹாசன் போட்டோவாலேயே" நடிகர் விக்ரம் படத்தை வரைந்தார். இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார், தமிழகத்தில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருவதுடன் நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசி வருகின்றனர், தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் உயிரை கொடுத்து நடித்து வருபவர் தான் விக்ரம், இதனாலே இவர்க்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தங்கலான் படத்தில் விக்ரம் செலுத்திய உழைப்பு அபாரமானது என்றும் தேசிய விருதுக்கு தகுதியான விக்ரம் நடிப்பு ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பை பாராட்டும் விதமாகவும், "அடுத்த கமலஹாசன், விக்ரம் தான்" என்பதை குறிக்கும் விதமாகவும் நடிகர் கமல் போட்டோவை நீர்வண்ணத்தில் தொட்டு நடிகர் "கமலஹாசன் போட்டோவாலேயே" நடிகர் விக்ரம் படத்தை 5 நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஓவியர் செல்வதை பாராட்டினார்கள்.
Next Story