நாளை மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்!

நாளை மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை: மாவட்டத்தில் புதுக்கோட்டை வெள்ளிக்கிழமை (ஆக. 23) மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார். அரிமளம் ஒன்றியம், கைக்குளான்வயல் கே. புதுப்பட்டி சமுதாயக் கூடத்திலும், புதுக்கோட்டை ஒன்றியம் வடவாளம் ஊராட்சி மன்ற வளாகத்திலும், பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம் எஸ்ஏஆர் திருமண மண்டபத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.எனவே, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியர் . அருணா அழைப்புவிடுத்துள்ளார்.
Next Story