சிவகங்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

X
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

