உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட மாணவன்!
Pudukkottai King 24x7 |22 Aug 2024 12:01 PM GMT
குற்றச்செய்திகள்
ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரது மகன் அஸ்வின்ராஜ் வயது (17). இவர் வெண்ணாவல்குடி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிமுடிந்து சூத்தியன்காடு செல்லும் சாலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் அஸ்வின்ராஜை உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில்ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story