பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் மளிகை கடைக்கு சீல்!

பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் மளிகை கடைக்கு சீல்!
குற்றச்செய்திகள்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்து அந்த கடையை உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினர் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்து பூட்டினார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பொன் பேத்தி கிராமத்தில் பிரபல மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புனவாசல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அங்கு திருப்புனவாசல் காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜேம்ஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது நாகூர் கனி வயது 56 தகப்பனார் பெயர் வரிசை முகமது முஸ்லிம் தெரு பொன் பேத்தி என்பவரது கடையில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருந்ததை கைப்பற்றி அந்த கடைக்கு சீல் வைத்து பூட்டினார் அதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது
Next Story