கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான குழு கூட்டம்!
Pudukkottai King 24x7 |23 Aug 2024 5:37 AM GMT
நிகழ்வுகள்
கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் இர்ஷாத் அகமது, இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Next Story