காரைக்குடி மாநகராட்சி வார்டு பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு

காரைக்குடி மாநகராட்சி வார்டு பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு
காரைக்குடி மாநகராட்சி வாா்டுப் பகுதிகளில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில், மேயா், அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி வாா்டுப் பகுதிகளில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில், மேயா், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா். மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, 9, 7,12,13, 21, 22 ஆகிய வாா்டுப் பகுதிகளில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, நிவா்த்தி செய்ய மேயா் முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களிடம் கேட்டறிந்த குறைகளை உடனே நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதில் மாமன்ற உறுப்பினா்கள் கண்ணன், ராணி சைதுன் சேட், முகமது சித்திக், கலா காசிநாதன், ராதா பாண்டியராஜன், ராம்குமாா், குருபாலு, நகா்நல அலுவலா் திவ்யா, மாநகராட்சி உதவிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Next Story