பொன்னேரி அருகே வடமாநில இளைஞர் தற்கொலை

பொன்னேரி அருகே வடமாநில இளைஞர் தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் தூக்கில் தொங்கியவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் கொடுவா (35) என்பது தெரிய வந்தது, இவர் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் சிமெண்ட் கடையில் வேலை செய்து வந்ததாகவும் நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக போன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதாகவும் தெரியவந்தது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story